சிங்கூர் போலத்தான் ஜெயங்கொண்டமும்… விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுங்கள்… கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்
சென்னை: மேற்கு வங்கத்தில் டாடா தொழிற்சாலைக்காக சிங்கூர் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் ஜெயங்கொண்டத்தில் மின்உற்பத்தி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கும் பொருத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கூரில் டாடா தொழிற்சாலைக்காக எப்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ, அதேபோன்றுதான் தமிழ் நாட்டிலும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 2400 மெகாவாட் மின்திட்டத்தை செயல்படுத்த 1993ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்காக, மேலூர், புதுக்குடி, தண்டலை, பெரியவளையம், தேவிமங்களம், புறஞ்சேரி, கல்லாத்தூர் உள்பட 23 கிராமங்களில் இருந்து 7210 விவசாயிகளிடமிருந்து 8300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அரசுக்கு சொந்தமான 1030 ஏக்கர் தரிசு நிலமும் ஒதுக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை விலையைவிட மிகக்குறைவாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பல குளறுபடியால் இந்தத் திட்டம் தொடங்கப்படவே இல்லை.
சிங்கூர் நிலம் பற்றிய தீர்ப்பில், "டாடா நிறுவனத்திற்காகத்தான் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே தவிர, பொது பயன்பாடு என்பது பற்றி எங்கும் இல்லை" என்று நீதிபதி போபாலகவுடா குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, தமிழ்நாட்டில் ஜெயங்கொண்டம் மின்திட்டத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படுத்தும் என்று 1993ம் ஆண்டு அறிவிக்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிங்கூர் நிலம் கையகப்படுத்தியதில் பொதுநலன் இல்லாதது போன்றே ஜெயங்கொண்டத்தில் நிலம் கையகப்படுத்தியதிலும் பொது நலன் இல்லை.
இரண்டாவதாக, சிங்கூரில் எதிர்ப்பு அதிகரித்தால் டாடா நிறுவனம் தனது இடத்தை காலி செய்து கொண்டு குஜராத் சென்றுவிட்டதால் நிலம் கையகப்படுத்தியது செல்லது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலும் 20 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே, ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும். நிலங்களை 20 ஆண்டுகள் முடக்கி வைத்திருந்ததற்காக நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுடன் வட்டியும் சேர்த்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் 14 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஒருவேளை மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இழப்பீடு நிர்ணயித்து கையகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டி சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications