சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழகம் மீதான அக்கறையிலா? வைகோ விளக்கத்தை பாருங்கள்
கேரளாவின் சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக அணை கட்டும் பணியை கேரளா தொடங்கியது. இதனால் தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு தடைவிதித்தது. அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர், 'சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல. தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு தடை விதித்துள்ளது' என்றார்.
மேலும், 3 தொகுதி தேர்தல் குறித்து பேசிய வைகோ, 'இந்தத் தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி யாருக்கும்ஆதரவு அளிக்காது. புறக்கணிப்பு என்பதே தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்' எனக் கூறினார்.
-
விட மாட்டேங்குறாங்க.. உள்ளே இருந்துகிட்டு கலகம்! கூட்டணி பேச்சில் இழுபறி.. திமுகவுக்கு பெரிய தலைவலி! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications