சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழகம் மீதான அக்கறையிலா? வைகோ விளக்கத்தை பாருங்கள்
கேரளாவின் சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக அணை கட்டும் பணியை கேரளா தொடங்கியது. இதனால் தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு தடைவிதித்தது. அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர், 'சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல. தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு தடை விதித்துள்ளது' என்றார்.
மேலும், 3 தொகுதி தேர்தல் குறித்து பேசிய வைகோ, 'இந்தத் தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி யாருக்கும்ஆதரவு அளிக்காது. புறக்கணிப்பு என்பதே தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்' எனக் கூறினார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications