பலாத்கார வழக்கில் சிக்கிய கூலித்தொழிலாளி - 3 வருடம் சிறை; 5 ஆயிரம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் பலாத்கார வழக்கில் சிக்கிய கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம்.
சிவகங்கையை அடுத்த சக்கந்தியைச் சேர்ந்தவர் இளம்பெண் அம்மு. கடந்த 2009 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதையடுத்து முருகன் மீதும், பலாத்கார சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பவுன்ராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முருகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரமும் அபராதம் விதித்து சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பவுன்ராஜ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications