குரங்கணி காட்டுத் தீ விபத்து: மதுரை அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு தீவிர சிகிச்சை
தேனி குரங்கணி மலை தீ விபத்தில் சிக்கிய 6 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

மதுரை: தேனி குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்த 6 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி அருகே குரங்கணி மலைப்பகுதியில் நேற்று பகலில் பயங்கர காட்டுத்தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

இதையடுத்து மத்திய அரசின் உதவியை கோரப்பட்டது. தீ விபத்தில் சிக்கியோரை மீட்க டீ எஸ்டேட் தொழிலாளர்களும் முயற்சித்தனர். இதுவரை 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்தில் சிக்கிய 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். டோலி மூலம் 27 பேரும் மலையில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டனர்.
இவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் கேரளா பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 2 பேர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications