செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து திருச்சி, மதுரை, குமரிக்கு இன்று சிறப்பு ரயில்கள்
சென்னை: மழை காரணமாக, சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால், சென்னையின் அருகேயுள்ள அரக்கோணம், திருவள்ளூர் நகர ரயில் நிலையங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சென்டிரல், எக்மோர் ரயில் நிலையங்கள் வரும் 5ம் தேதி மதியம் வரை மூடப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம் ஆகிய நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
திருவள்ளூரில் இருந்து இரவு 8 மணிக்கு ஹைதராபாத்துக்கு சிறப்பு ரயில் புறப்படுகிது. அரக்கோணம், ரேணிகுண்டா, குடூர், நெல்லூர் நகரங்களில் ரயில் நின்று செல்லும்.
அரக்கோணத்தில் இருந்து மதுரைக்கு இன்று இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. காட்பாடி, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல் நகரங்களில் நின்று செல்லும்.
திருவள்ளூரில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, எர்ணாக்குளம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல, நெல்லையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
அதேபோல ராமேஸ்வரத்தில் இன்று இரவு 9 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் வழியாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்துமே பாசஞ்சர் வகை ரயில்களாகும்.
சிறப்பு ரயில்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 044-28190216 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications