முதல்வர் ஜெயலிதாவின் டெல்லி பயணத்தை விமர்சித்த ஈவிகேஎஸ்- சரத்குமார் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கேவன் தெரிவித்துள்ள கருத்துக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். மத்திய அரசில் உள்ளவர்களை முதல்வர் சந்திக்காமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளார் என்ற இளங்கோவன், தற்போது முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகளாக வெளியிடுகிறார்.
தமிழகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததை அவர்களின் தோழமைக் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் பல திட்டங்கள் செயல்வடிவம் பெரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தமிழக மீனவர் , இலங்கை தமிழர் , நதி நீர் பங்கீடு குறித்த நடவடிக்கைகள், கச்சதீவு எனப் பலவிதமான பிரச்னைகளுக்கு மத்திய அரசின் குறிக்கீடு தேவையாக இருக்கும்போது, முதல்வரின் பயணம் குறித்த இளங்கோவனின் கருத்து ஏற்புடையதல்ல. அது கண்டிக்கத்தக்கது"
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications