சென்னை அரசு பொது மருத்துவமனைக்குப் படையெடுக்கும் பாம்புகள் - அடுத்தடுத்து சிக்கியதால் நோயாளிகள் பீதி
சென்னை: சமீபகாலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர நாள்தோறும், புறநோயாளிகளாக தினமும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

கடந்தாண்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிசு ஒன்றின் சடலத்தை எலி கடித்ததைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் எலி, பூனை மற்றும் நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனபோதும், தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகங்களில் இவற்றின் நடமாட்டம் குறையவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோயாளிகள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடைந்த சேர், நாற்காலிகள் போன்றவற்றை போட்டு வைத்திருக்கும் அறைகளில் எலிகளைப் பிடிப்பதற்காக தற்போது புதிய வரவாக பாம்புகள் வந்து சேர்ந்துள்ளதாம்.
கடந்த 21ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறை அருகே, ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் நல்ல பாம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் அந்த பாம்பை சடலமாக மீட்டனர்.
இந்நிலையில் சமையல் அறை அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இறந்த நிலையில் இருந்த ஒரு பாம்பை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பகுதியில் இரண்டு பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால்,வார்டுகளில் உள்ள உள்நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சமையல் அறை அருகில் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எப்போது பாம்பு வருமோ என்ற அச்சத்திலேயே நிம்மதி இழந்து காணப்படுகின்றனராம்.
யாராவது ஒரு "ஸ்னேக் பாபு"வைப் பிடித்து வந்து மிச்சம் மீதி இருக்கும் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தினால் நல்லது என்று நோயாளிகள் புலம்புகிறார்கள்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications