வருகிறது என் சுயசரிதை.. தமிழில்.. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.. சரிதா நாயர்!
கோவை: தன்னுடைய சுயசரிதை புத்தகம் விரைவில் வெளிவர இருப்பதாகவும், அதில் தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும் என சோலார் பேனல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியில் செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்படு வந்தனர் சரிதா நாயரும், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும்.

கடந்த 2009-ம் ஆண்டு இவர்கள் மீது காற்றாலை மற்றும் சோலார் பேனல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் (எண்-6) நடந்து வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்டில் சரிதா நாயர் மட்டும் ஆஜரானார். ஆனால், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, வழக்கை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோலார் பேனல் வழக்கில் 90 சதவீத ஆவணங்களை இதற்கென அமைக்கப்பட்ட கமிஷனிடம் ஒப்படைத்து விட்டேன். அந்த கமிஷன் தான் அறிவிக்கும். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் சமர்ப்பித்துள்ளனர்.
எனக்கு உடல்ரீதியாக எந்த அச்சுறுத்தலும் வரவில்லை. ஆனால் மனரீதியாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது.
கேரளாவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, இந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். விசாரணை முடிவில் என் மீது குற்றமில்லை என ஆதாரத்துடன் நிருபிப்பேன்.
என்னுடைய சுய சரிதை புத்தகத்தை தமிழில் எழுத என்னிடம் கேட்டார்கள். அந்த புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. இதில் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும்" எனத் தெரிவித்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications