ரிசார்ட்டிலேயே பல எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்... அடிவாங்கி முடங்கி கிடப்பவர்களா?
கூவத்தூர் ரிசார்ட்டில் மேலும் சில எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து புறப்படாமல் சில எம்எல்ஏக்கள் அங்கேயே தங்கிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்புக்குப் பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூருக்கே வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளதையடுத்து கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்த எம்எல்ஏக்கள் 9 நாட்களுக்குப் பிறகு இன்று சொகுசுப் பேருந்துகள் மூலம் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டனர். 3 சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களில் சில எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுக்குள்ளேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அடிவாங்கி முடங்கி கிடக்கின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே பதவியேற்புக்குப் பின்னர் மறுபடியும் எம்எல்ஏக்கள் கூவத்தூரே வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏக்களை வெளியே விட்டால் அவர்கள் அணி மாறி ஓபிஎஸ்க்கு ஆதரவளித்து ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள் என சசி தரப்பு அஞ்சுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications