கருக்கா வினோத் உண்மையை சொல்லிடுவாரோ என சிலருக்கு பயம்! சிபிஐ விசாரணை கோருவது இதற்கு தான்! -அப்பாவு
நெல்லை: தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சி தான் பெட்ரோல் குண்டை வைத்து விளையாடுகிறது எனவும் கருக்கா வினோத் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் சிலர் சிபிஐ விசாரணை கேட்பதாக நினைக்கிறேன் என்று சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்ப முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் குண்டு வீசியது ஏன் என்று கேட்டதற்கு சிறையில் இருந்த போது வெளியே வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு கருக்கா வினோத்துக்கு வேறு யாரும் உறுதுணையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அப்பாவு பேட்டி: இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரை உங்களுக்கு தெரியும், இங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இதுவரைக்கு பெட்ரோல் குண்டை எடுத்தது போது எனக்கு நினைவு இல்லை. எனக்கு ஒரு பழைய நினைவு என்றால், பாஜகவினுடைய முக்கிய தலைவர்கள் குறிப்பாக கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார், திருவள்ளூரில் பரமானந்தம் இவங்க 3 பேரும் பெட்ரோல் குண்டு வீசினர்.
அமைதியை சீர்குலைக்க: போலீஸ் விசாரணையில் கட்சியில் எங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கவும், பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்கும் பாதுகாப்பு கோரியும் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல் இந்து மக்கள் கட்சி 2018ல் திருவள்ளூரில் காளிகுமார் என்பவர் 2020 இல் திருப்பூரில் பரமன்நந்து என்று நினைக்கிறேன். அதைபோல திருச்சி பக்கத்தில் சக்திவேல்... இந்த மூன்றுபேரும் இந்து மக்கள் கட்சியில் இருந்து.. ஒருத்தர் பைக்கை எரிக்க சொல்கிறார்.
இன்னொருவர் காரை எரிக்க சொல்கிறார். ஒருவர் அவரது நண்பரை வைத்தே வெட்ட சொல்கிறார். மூன்று பேரது ஸ்டேட்மண்டுமே... கட்சியினுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும். நாங்க முக்கியமான ஆள் என தெரியவேண்டும் என்பதற்கு தான் நடந்து இருக்கிறது. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். இந்த ஆறு சம்பவத்தையும் நீங்க என்ன சொல்கிறீர்கள். அது கூட இந்த கருக்கா வினோத்... 4 சம்பவம்.. இந்த 10 சம்பவங்களும் பாஜக அல்லது இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு தமிழ்நாட்டில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும். வன்முறையை தூண்ட வேண்டும் என்பதுதான்.
குறிப்பிட்ட கட்சி மட்டுமே: உங்களுக்கு இன்னொன்றும் தெரியும். வெளிமாநில தொழிலாலாளர்களை தமிழ்நாட்டில் அடித்து விரட்டுகிறார்கள் இன்னொரு கலவர சம்பவம் போடப்பட்டது. அதுவும் பாஜக பின்னணியில் தான் நடந்தது. இதையும் முதலவர் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தார். தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வரனும் என்பதற்காக மக்களுக்கு இவ்வளவு பெரிய கொடூரமான செயல்களை செய்யலமா என்பதுதான் என் கேள்வி.
நான் அரசியலுக்காக பேசவில்லை. கட்சிக்காக பேசவில்லை. ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே இந்த கருக்கா வினோத் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர்களுக்கு உள்ளேயே பல பேர் இருப்பதாக சொல்கிறார்கள். அது எனக்கு தெரியாது. ஆனால் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இயக்கம், குறிப்பிட்ட கட்சி மட்டுமே பெட்ரோல் குண்டு வைத்து விளையாடுகிறார்கள்.
உண்மையை சொல்லிவிடுவார் என்ற பயம்: இதை வந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கான முயற்சியோ என நான் சொல்லவில்லை. வெகுஜன மக்கள் சொல்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி நடப்பதால் எவ்வளவு பெரியாக ஆளாக இருந்தாலும் தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளிக்கு தண்டனை வழங்கி கொடுப்பார் ஸ்டாலின்.
கருக்கா வினோத்தை நீதிமன்ற காவலுக்குதான் அனுப்பியிருக்கிறார்களே தவிர ஜாமீனில் விடவில்லை. யாரை எப்படி விசாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இப்போ கூட சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல பேர் கேட்கிறார்கள். இதில் எனக்கு என்ன முரண்பாடு இருக்கிறது என்றால், இவர் (கருக்கா வினோத்) உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications