Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திரிதியை என்ற பெயரில் பொது மக்களிடம் மிகப் பெரிய மோசடி வேலை நடைபெறுகிறது என்று தமிழ் பண்பாட்டு நடுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தமிழ் பண்பாட்டு நடுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அட்சய திரிதியை என்னும் நாளில் தங்கம் வாங்கினால் அதன் பின் வரக்கூடிய நாட்களில் செல்வம் கொழிக்கும் என்று வர்த்தக நோக்கம் கொண்ட ஆரிய இந்துக்கள் நம்மை நம்ப வைத்து இப்போது பணம் சம்பாதிக்கார்கள்.

Some take advantage of Akshaya Tritiya: Tamil Cultural Centre

இந்த வழக்கமும் மிகச் சமீக காலத்தில் தான் உருவானது. ஆரிய வேத மதத்திலும் இந்த நாளைப் பற்றிய விசேஷ குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை என்று சோதிடர்கள் கூறுகின்றனர்.

மேலும், புராணங்களை மேற்கோள் காட்டி இந்த நாளில் தான் திரேதா யுகம் தொடங்கப்பட்ட காலம் என்றும் அதனால் இந்த நாளில் வாங்கினால் வீடுகளில் செல்வம் பெருகும் என்று கதை கட்டி விட்டனர் வியாபார நோக்குடைய ஆரிய இந்துக்கள்.

திரேதா யுகம் என்று சொல்லப்படும் காலம் உண்மையில் வரலாற்று ரீதியாக இல்லை. மேலும், ஏழை அப்பாவி மக்கள் பலரும் இந்தக் கட்டுக் கதைகளை உண்மை என்று நம்பி பல இடங்களில் கடன் வாங்கி தங்கம் வாங்குகின்றனர். இதனால் அவர்கள் பணக்காரர்கள் ஆகுவதில்லை, கடன்காரர்களாக தான் மாறுகின்றனர்.

தங்கம் வாங்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் எந்த நாளில் வேண்டுமாலும் வாங்கலாம். தங்கம் விலை குறைந்துள்ள காலத்தில் வாங்கலாம். அதில் தவறில்லை.

ஆனால் இந்த நாளில் நெரிசலில் சிக்கி நகை வியாபாரிகளின் நயவஞ்சக தந்திரங்களுக்கு ஆட்பட்டு நகை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது திட்டமிட்ட மோசடி ஆகும். இதை கண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், இது பொய் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு இந்து மத, தமிழர் மதத் தலைவர்களுக்கும் உள்ளது. எனினும் அவ்வாறு இவர்கள் செய்வதில்லை என்பது தான் வேதனை.

உண்மையில் தமிழர் பண்பாட்டில் இப்படியான தினத்தை நாம் என்றுமே கொண்டாடியது இல்லை. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் இல்லை. தமிழர் வரலாற்றில் இது குறித்து பேசப்பட்டதும் இல்லை. இதை வடநாட்டு ஆரிய இந்துக்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணித்துவிட்டனர். எனவே, பொது மக்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இந்த நாளை புறக்கணிக்க வேண்டும்.

மேலும், அட்சய திரிதியை என்ற பெயிரில் வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மற்றும் நகைகள் வாங்க தூண்டும் மோசடி செயல்களை இனி வரும் காலத்திலாவது தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி மக்களை வணிக ரீதியிலான கொள்ளையர்களிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்றும், பொது மக்கள் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+