பெற்ற மகனே தாயைக் குத்திக் கொலை செய்த கொடுமை...!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் பெற்ற மகனே தாயை குத்தி கொலை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, இவரது மணைவி கௌசல்யா (46). சம்பவத்தன்று கௌசல்யா கோயம்புத்தூரில் உள்ள உறவினர் இறந்து போன வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். பின்னர் தாமதமாக வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

Son kills mother in anger

அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகன் சித்தார்தன் (27), ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று கேட்டு தாயுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தாய், மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சித்தார்தன் களைகொத்தி எனப்படும் இரும்பு கம்பியால் தன் தாயை பலமாக தாக்கி உள்ளார். மகனிடமிருந்து உயர்பிழைக்க தப்பி ஓடினார் கௌசல்யா, இருந்தபோதிலும் விடாமல் விரட்டி சென்று தன் தாயை குத்தி செய்தார் சித்தார்தன்.

Son kills mother in anger

தகவலறிந்து வந்த சின்னதாராபுரம் போலீசார் சித்தார்தனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சித்தார்தன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பெற்று வளர்த்த தாயை கொலை செய்த சித்தார்தன், எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்ததை கண்ட உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை நெகிழ செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+