Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காணாமல் போன குடம்... மாமியாரை கொன்ற மருமகன்... ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு அருகே தண்ணீர் குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது அரிவாள்மனை உடைந்து விழுந்ததால் மனைவியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அருகே தண்ணீர் 2குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை தாக்க எடுத்த அரிவாள் மனை அருகில் படுத்திருந்த மனைவியின் தாயார் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி நந்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி உள்ளார். 58 வயதான ராமசாமி கூலித்தொழிலாளியாக உள்ளார்.

Son in law kills mother in law in family issue in Erode

இந்நிலையில் சவுந்தரத்தின் மனைவி நேற்று தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது குடம் காணாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவி கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமசாமி, தனது மனைவியின் தலையில் அரிவாள் மனையால் ஓங்கி அடித்துள்ளார்.

பதம் பார்த்த அரிவாள்மனை

அப்போது அரிவாள் மனை இரண்டாக உடைந்து வீட்டில் படுத்திருந்த சவுந்தரத்தின் தாயார் பெரியம்மா தலையில் விழுந்து பதம் பார்ததது. இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

தீவிர சிகிச்சை

இதையடுத்து காயமடைந்த பெரியம்மா ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

மாமியார் பலி

இருப்பினும் சிகிச்சைப்பலனின்றி பெரியம்மா உயிரிழந்தார். இதையடுத்து மாமியார் கொலைக்கு காரணமான மருமகன் ராமசாமி கைது செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+