முக அழகிரி, கனிமொழிக்காக கருணாநிதி பாடும் பாடல்களாம் இது... நெட்டிசன்ஸ் குசும்பு
சென்னை: மு.க. அழகிரியை விமர்சித்து திமுக தலைவர் கருணாநிதி என்னதான் அறிக்கை வெளியிட்டாலும் இன்னமும் மக்கள் அதை முழுவதும் நம்ப தயாராக இல்லை போலும்... நாளைக்கே ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தொடரத்தான் செய்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து மு.க. அழகிரி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். இந்த பேட்டியை ஒதுக்கித் தள்ளுமாறு கருணாநிதி அறிக்கை ஒன்றில் பதிலடி கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பழைய சினிமா பாடல்களை குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ளதை நீங்களும் படியுங்களேன்...

Elumalai Venaktesan
கட்சிக்காரன் ஒதுக்கத் தயார்தான்.. ஆனால் நாளைக்கு கண்கள் பனித்தன.. நொரையீரல் நெருங்கின..கல்லீரல் கணத்தன..ன்னு போட்டீங்கன்னா என்னாவும்?பழைய சினிமா பாடல்தான் ஞாபகம் வருகிறது..

''கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக் காணத் திரியும் ஒரு பிள்ளை
கானல் நீரில் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்''
பாடல் முதல் கமெண்ட்டில்..."
என்று போட்டிருக்கிறார். அத்துடன் இந்த பாட்டுக்கான யூ டியூப் லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்
அவர்.
அதே பக்கத்தில் இது தொடர்பான விவாதத்தில் "கனிமொழிக்கு கருணாநிதி பாடுவது போல் ஒரு பாட்டு இருக்கு..கேக்கறீங்களா" ன்னு கேட்டு
"இனிமேல் எனக்கென்ன கவலை" பாடலை லிங்குடன் போட்டுவிட்டதுடன்
"கருணாநிதி பாடுவதாக நினைத்து கேட்டுப்பாருங்கள்..அற்புதமாக இருக்கும்." என குசும்பாகவும் பதிவிட்டுள்ளார்.
எப்பூடி?












Click it and Unblock the Notifications