இந்து கோவில்கள், கடவுள்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. கிறிஸ்தவ போதகர் மீது போலீஸ் வழக்கு
கோவை: இந்து கடவுள்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பரப்பியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது மோகன் சி லாசரஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் ஜெய்கிந்தமுருகேசன் என்பவர் சூலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

சாத்தான்கள்
அந்த புகார் மனுவில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் மோகன் சி லாசரஸ் கலந்து கொண்டு பேசியபோது, "ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்று பேசியுள்ளார். இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம்தான் என்றும் சொல்லி இருக்கிறார்.

நடவடிக்கை வேண்டும்
குறிப்பாக கும்பகோணம் பகுதியில் அத்தனை கோயில்களிலும் சாத்தான் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் அவர் கூறியதுடன், இது தொடர்பான வீடியோக்களையும் சமூகவலைளதங்களிலும் பதிவிட்டு வருகிறார். எனவே இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

வைரல் வீடியோ
இதேபோல, கோவை கருமத்தம்பட்டி மற்றும் வி.எச்.பி சார்பிலும் பொள்ளாச்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மோகன் சி லாசரஸ் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அமைப்பு
இந்நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில் மோகன் சி லாசரஸ் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் எஸ்ஐ தங்கராஜ் மதபோதகர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் பதிவு செய்துள்ளதுடன், இது சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications