For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை-நெல்லை இடையே தஞ்சை, விருதாச்சலம் வழியாக இரு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை-திருநெல்வேலி நடுவே, தஞ்சாவூர் மற்றும் விருதாச்சலம் வழியாக இருவேறு சிறப்பு ரயில்களை இருமார்க்கத்திலும் இயக்குவதாக அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

Southern Railway to run Chennai-Tirunelveli special trains
  • இதுகுறித்த செய்திக்குறிப்பு: நெல்லை-சென்னை எழும்பூர் சூப்பர் பார்ஸ்ட் சிறப்பு ரயில் (06702), செப்டம்பர் 14ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எக்மோர் வந்தடையும்.
  • சென்னை எக்மோர்-நெல்லை சிறப்பு ரயில் (06701) செப்டம்பர் 15ம்தேதி திங்கள் இரவு 10.45 மணிக்கு எழும்பூரிலிருந்து கிளம்பி மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
  • இந்த சிறப்பு ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ், மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
  • இதேபோன்று விருதாச்சலம் வழியாக மற்றொரு சிறப்பு ரயில் நாளை செப்டம்பர் 11ம்தேதி நெல்லையில் இருந்து சென்னைக்கு (06704) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
  • மறுமார்க்கத்தில் 12ம்தேதி வெள்ளிக்கிழமை, எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் (06703) இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
  • இந்த சிறப்பு ரயில், வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூர் சென்றடையும். நெல்லை-எழும்பூர் ரயில் மாம்பலத்திலும் நின்று செல்லும்.
  • இந்த இரு சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.


English summary
Southern Railway will run special trains to clear the extra rush of passengers between Chennai and Tirunelveli. Advance reservations for the trains will commence on September 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X