தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், அந்த ரயில்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அக்டோபர் 31 ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் அதே நாளில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் நவம்பர் 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்தும், சென்ட்ரலில் இருந்தும் திருநெல்வேலிக்கு தலா ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூருக்கு நவம்பர் 4 ஆம் தேதியும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோன்று கோவை, சென்னை சென்ட்ரல் இடையே நவம்பர் 1 மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை அக்டோபர் 24ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications