கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த எஸ்ஐ, ஏட்டுக்கள் கைதாகிறார்கள்?.. எஸ்.பி. செந்தில்குமாருக்கு அதிரடி தடை!
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணையின்போது மாறி மாறிப் பேசி வருவதால் அவர்களைக் கைது செய்து விசாரிக்க அதிரடியாக யோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.
திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கபப்ட்டுள்ளது சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நாமக்கல் வந்து முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

எஸ்.பி. செந்தில்குமார்
எஸ்.பி. செந்தில்குமாரிடம் நாகஜோதி தலைமையிலான டீம் தீவிர விசாரணை நடத்தியது. இதில் செந்தில்குமார் பல முறை விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்ததாக உறுதியாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை தற்போது கிட்டத்தட்ட முடக்கும் நிலைக்கு காவல்துறை மேலிடம் கொண்டு வந்துள்ளது. அவர் நாமக்கல்லை விட்டு வெளியேறக் கூடாது என்று அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வர வேண்டும் என்றும் யாரையும் தேவையில்லாமல் சந்திக்கக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மாறி மாறிப் பேசும் எஸ்.ஐ. ஏட்டுக்கள்
இதற்கிடையே, கோகுல்ராஜ் வழக்கையும் விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், இந்த வழக்கை இதற்கு முன்பு விசாரித்து வந்த எஸ்.ஐ, தலைமைக் காவலர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின்போது, அவர்கள் மாறி மாறிப் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களைக் கைது செய்து முறைப்படி விசாரணை நடத்தலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications