உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார் வேலுமணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 42 நிரந்தர நீதிபதி பதவிகள் உள்ளது. மற்ற இடங்கள் கூடுதல் நீதிபதி பணியிடங்கள் ஆகும்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு பிளீடராக பணியாற்றி வந்த வி.எம்.வேலுமணியை (51) நீதிபதி பதவிக்கு சென்னை உயர் நீதி மன்றம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வேலுமணியை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி வேலுமணி திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா, கனக்கம்பட்டியை சேர்ந்தவர். பழநி ஆண்டவர் கலைக் கல்லூரியில் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். மேலும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.
வேலுமணி இன்று நீதிபதியாக இன்று பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications