சென்னையில் நடைபெறும் சிறப்பு ”பாஸ்போர்ட் மேளா”- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடைபெறுகின்ற சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் கலந்து கொள்ள இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் வருகிற 19 ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பு மேளா நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது.
முன்பதிவு செய்தவர்கள் மட்டும் முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுடைய விண்ணப்பங்கள் முகாமில் பரிசீலனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். பாஸ்போர்ட் முகாமில் தட்கல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளார்.