அப்பல்லோ முன்பு பொங்கல் வைத்து, தீபம் ஏற்றி படையலிட்ட அதிமுக மகளிர்!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அதிமுக மகளிர் அணியினர் இன்று அப்போலோ மருத்துவமனை வாசல் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி அதிமுக மகளிர் அணியினர் இன்று அப்போலோ மருத்துவமனை முன்பு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
கிட்டத்தட்ட ஒன்னறை மாதங்களாக அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக சிறப்பு யாகங்கள், பால் குடம் எடுத்தல், கோமாதா பூஜை செய்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், அப்போலோ மருத்துவமனையே ஒரு கோவில் போல் ஆகியவிட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அப்போலோ மருத்துவமனை வாயிலில் நாள்தோறும் ஒவ்வொரு பூஜையை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மகளிர் அணியினர் ஒன்று கூடி, அப்போலோ வாசலில் பொங்கல் வைத்தனர், பின்னர் தீபம் ஏற்றி படையலிட்டு கடவுளை வழிபட்டனர். அப்போது தங்களது தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

இந்த வழிபாட்டின் போது அப்போலோ மருத்துவமனை வாசல் முன்பு அதிமுக பெண் தொண்டர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications