For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைப்பூசம்: மதுரை, காரைக்குடியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, மதுரை மற்றும் காரைக்குடியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் முருகனை தரிசிக்க பல லட்சக்கணகான பக்தர்கள் வருவார்கள் எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரை, காரைக்குடியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

special train announced for palani festival

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் திருத்தலங்களுக்கு செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்க கூடுதல் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை - பழனி : 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், காரைக்குடி - பழனி : 24ஆம் தேதி காலை 05.30 மணிக்கும், பழனி -காரைக்குடி : 23 மற்றும் 24ம் தேதி மாலை 03.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

English summary
special trains announced for palani murugan festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X