பொங்கல் பண்டிகை: நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06175) அன்று இரவு 9 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். இதேபோல கோயம்புத்தூரிலிருந்து 14 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07176) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுண், சேலம் சந்திப்பு, சங்ககிரி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்புத்தூர் வடக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையிலிருந்து வரும் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
அதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06177) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 16-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். சென்ட்ரலில் இருந்து விஜயநகரத்திற்கு 14-ம்தேதி மாலை 7 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.












Click it and Unblock the Notifications