சென்னை கடற்கரை-பெங்களூர் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரை முதல் பெங்களூர் வரையில் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. புறநகர் ரயில் சேவை, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயங்குகிறது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால், எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் 5ம் தேதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், கடற்கரை ரயில் நிலையம் முழு வீச்சில் பயன்படுத்தப்படுகிறது.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் 2.30 மணிக்கு பெங்களூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோலிங்கர், வாலாஜா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக அந்த ரயில் பெங்களூர் சென்றடையும்.
இதேபோல, கடற்கரை-வேளச்சேரி நடுவேயான பறக்கும் ரயில் சேவை வழக்கம்போல இயங்குகிறது. தாம்பரம்-செங்கல்பட்டு நடுவேயான ஷட்டில் சர்வீஸ் விரைவில் தொடங்கும். இவ்வாறு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications