இன்று முதல் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் நாகர்கோவில், நெல்லை, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுடன் சிறப்பு ரயிலில் பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதகர் மூலம் முன்பதிவுக்குரிய கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications