சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு பகல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை : கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு பகல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
*மதுரையில் இருந்து ஜூலை 22 மற்றும் 29 தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) காலை 10 மணிக்கு புறப்படும் மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் , அதே நாட்களில் மாலை 6.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.

*மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 25 மற்றும் ஆகஸ்டு 1-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) காலை 6.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில் , அதேநாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மதுரையை சென்றடையும்.
*இந்த சிறப்பு ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
*கோவையில் இருந்து வருகிற 22 மற்றும் 29 தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) காலை 11 மணிக்கு புறப்படும் கோவை-சென்னை சென்டிரல் சிறப்பு ரயில், இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
*மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 25 மற்றும் ஆகஸ்டு 1ம்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரயில் , அதேநாட்களில் மாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications