தமிழகம் முழுவதும் சாராய வேட்டை.. 1,558 குற்றவாளிகள் கைது.. 1,842 வழக்குகள் பதிவு - தமிழக டிஜிபி
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கள்ளச்சாராய வேட்டையில் 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதா தமிழக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கரவாகனங்களும் கைப்பற்றப்பட்டது. இந்த 2023ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4.534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 255,078 கைப்பற்றப்பட்டுள்ளது.

லிட்டர் கள்ளச்சாராயம்அதேபோல் கள்ளசாராயம் கடத்த, பயன்டுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள்உட்பட 1,077 மோட்டர் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications