9ம் தேதி பலத்த மழை பெய்யும்.. சொல்கிறார் எஸ்.ஆர்.ரமணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகாரணாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். 9ம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மழையை கிட்டத்தட்ட மறந்து விட்டனர். குறிப்பாக சென்னையில் மழை கிட்டத்தட்ட நின்று போய் விட்டது. இந்த நிலையில் இன்று ஒரு நல்லசெய்தி சொல்லியுள்ளார் ரமணன்.

SR Ramanan forecasts rain in TN

இன்று செய்தியாளர்களிடம் ரமணன் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. இப்போது தென்மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

அந்தமானில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் தமிழ்நாடு - புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். 9-ந்தேதி பலத்த மழை இருக்கும். அதிலும் குறிப்பாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+