இலங்கை கடற்படையால் மேலும் 7 மீனவர்கள் இன்று சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று தமிழகம் வர இருக்கும் நிலையில், மேலும் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமாக விசைப்படகு உள்ளது. இப்படகில் திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன், இனியன், சுந்தரமூர்த்தி, வினோத், நிவாஸ், நவீன், சிவா ஆகிய 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 7 பேரையும் எல்லையை விட்டு வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறைப்பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களும் திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+