எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இலங்கையின் பருத்தித்துறை அருகே அவர்கள் மீன்பிடித்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி 17 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை.
நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களேயான நிலையில் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.