இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: 28 தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி தங்கள் பகுதிக்கு வந்ததாகக் கூறினர்.

இதையடுத்து அவர்கள் தமிழக மீனவர்கள் 28 பேரை கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவர்களின் ஒரு விசைப்படகும், 2 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். முன்னதாக மார்ச் 3ம் தேதி 8 மீனவர்களும், 6ம் தேதி 29 பேரும், 10ம் தேதி 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களை தாக்குவது என்று இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.












Click it and Unblock the Notifications