For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றிவு 4 படகுகளுடன் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இங்கு வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற வழிமறித்த இலங்கை கடற்படையினர், 16 மீனவர்களையும் அவர்களது 4 விசைப் படகுகளையும் சிறை பிடித்து சென்றனர்.

அதேபோல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும் 3விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Sri Lankan Navy has arrested Tamil Fisherman Kottaipattinam in Pudukottai district — for fishing in Sri Lankan waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X