குற்றவாளிகளிடம் எந்த மாதிரி விசாரணை என கேட்க கூடாது: ஐ.நா அறிக்கை பற்றி பத்திரிகையாளர் 'பளிச்'
சென்னை: குற்றச்சாட்டுக்கு உட்பட்டோரிடம் எந்த மாதிரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றவாளிகளிடமே கேட்க வேண்டியதில்லை என்று இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆவணப்படங்கள் வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.
Sri Lanka's Killing Fields மற்றும் No Fire Zone ஆகிய டாக்குமென்டரிகளை வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தி நியூஸ் மினிட் என்ற தளத்துக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நமக்கு தெரிந்த தகவலில் மேலும் சில தகவலை சேர்த்துள்ளதோடு, நமது தகவல்களை உறுதி செய்துள்ளது இவ்வறிக்கை. நான் வெளியிட்ட ஆவணப் படங்களை உண்மையில்லை என்று மறுத்த இலங்கை அரசுக்கு ஐ.நா.அறிக்கை மற்றொரு பின்னடைவாகும்.
ஐ.நா. அறிக்கையில் சில அம்சங்கள் விட்டுப்போயுள்ளது உண்மைதான். ஏனெனில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடந்துள்ளது. அதில் ஒரு சில விட்டுப்போயுள்ளன. இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, ஐ.நா. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். சர்வதேச விசாரணைதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக முடியும். குற்றவாளியிடம் எந்த மாதிரி விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்க முடியாது.
புதிய அரசு சில விவகாரங்களில் ராஜபக்சே அரசைவிட மாறுபட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களுடனான உறவில் இரு அரசுகளுக்கும் பெரிய மாற்றம் இல்லை. இலங்கையில் மாற்றம் வந்துள்ளது, ஆனால் தமிழர்களுக்கு மாற்றம் வரவில்லை. காணாமல் போன தமிழர்கள் நிலை பற்றி இன்னும் தெரியவில்லை, பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்ப தரப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications