குற்றவாளிகளிடம் எந்த மாதிரி விசாரணை என கேட்க கூடாது: ஐ.நா அறிக்கை பற்றி பத்திரிகையாளர் 'பளிச்'
சென்னை: குற்றச்சாட்டுக்கு உட்பட்டோரிடம் எந்த மாதிரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றவாளிகளிடமே கேட்க வேண்டியதில்லை என்று இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆவணப்படங்கள் வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.
Sri Lanka's Killing Fields மற்றும் No Fire Zone ஆகிய டாக்குமென்டரிகளை வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தி நியூஸ் மினிட் என்ற தளத்துக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நமக்கு தெரிந்த தகவலில் மேலும் சில தகவலை சேர்த்துள்ளதோடு, நமது தகவல்களை உறுதி செய்துள்ளது இவ்வறிக்கை. நான் வெளியிட்ட ஆவணப் படங்களை உண்மையில்லை என்று மறுத்த இலங்கை அரசுக்கு ஐ.நா.அறிக்கை மற்றொரு பின்னடைவாகும்.
ஐ.நா. அறிக்கையில் சில அம்சங்கள் விட்டுப்போயுள்ளது உண்மைதான். ஏனெனில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடந்துள்ளது. அதில் ஒரு சில விட்டுப்போயுள்ளன. இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, ஐ.நா. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். சர்வதேச விசாரணைதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக முடியும். குற்றவாளியிடம் எந்த மாதிரி விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்க முடியாது.
புதிய அரசு சில விவகாரங்களில் ராஜபக்சே அரசைவிட மாறுபட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களுடனான உறவில் இரு அரசுகளுக்கும் பெரிய மாற்றம் இல்லை. இலங்கையில் மாற்றம் வந்துள்ளது, ஆனால் தமிழர்களுக்கு மாற்றம் வரவில்லை. காணாமல் போன தமிழர்கள் நிலை பற்றி இன்னும் தெரியவில்லை, பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்ப தரப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications