பிரபல ரவுடி, காஞ்சிபுரம் ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை
சென்னை: கொலை ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்ர தனபாலன் . இவர் மீது கொலை, சாராய வழக்கு, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். மேலும், அங்கிருந்தே தனது ஆட்களை ஏவி ஆளில்லாத சொத்து அபகரிப்பு, நில உரிமையாளர்களுக்கு கொலைமிரட்டல்விடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.
இதைதொடர்ந்து காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஸ்ரீதரின் மகன் சந்தோத்குமாரிடம் காஞ்சிபுரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியாாகியுள்ளன. காஞ்சிபுரம் காவல்துறை வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன.