ஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே!
ஓகி புயல் பாதிப்பில் இருந்தே மீனவர்கள் மீண்டு வராத நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஓகி புயல் பாதிப்பில் இருந்தே மீனவர்கள் மீண்டு வராத நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடந்த 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.
புயலுக்கு முன்பு தங்குக்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊர் திரும்பாததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடலில் இறங்கினாலே போதும்
ஓகி புயலின் கோர தாண்டவம், உறவுகளை பறிகொடுத்த சோகம் என முடங்கி கிடந்த மீனவர்கள் தற்போது தான் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் இறங்கினாலே போதும் என ரோந்து கப்பல்களில் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறது இலங்கை கடற்படை.

தாக்குவதே வாடிக்கை
வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளுடன் அவர்களை கைது செய்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்தெரிந்து அவர்களை தாக்குவததையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

எத்தனையோ போராட்டங்கள்
ஓகி புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிடம் இருந்து தப்பி இலங்கை கடற்படையிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் தமிழக மீனவர்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எத்தனையோ முறை தமிழக மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவிட்டனர்.

பேரிடர்களை தடுக்க முடியாது
ஆனாலும் மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் விவகாரத்தில் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கை சீற்றங்களையும் பேரிடர்களையும் தடுக்க முடியாது.

வேதனையுடன் கோரிக்கை
செயற்கை இடரான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர் மீனவர்கள். ஆனால் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

துயரங்களுக்கு விடிவு எப்போது?
மீனவர்களின் இந்த துயரங்களுக்கு விடிவு எப்போது? உருப்படியான தீர்வு காண்பது எப்போது? அக்கறையுடன் தீர்வு காணப் போவது யார்.. இனியாவது மீனவர்களை பொருட்டாக நினைத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமா இந்த அரசுகள்?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications