காங்கிரஸ், தி.மு.க தோல்வி ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனை: டி.ராஜேந்தர்
சென்னை: லோக்சபா தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் அடைந்த தோல்வி, ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், கூறியதாவது:
ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா காட்டிய ஈடு இணையற்ற அக்கறையே லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் காங்கிரசுடன் தி.மு.க கைகோர்த்ததினால் ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனைதான் லோக்சபா தேர்தல் தோல்விக்குக் காரணம்.
ராஜினாமா நாடகம்
ஈழத்தில் போர் நடைபெற்ற போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா நாடகம் ஆடினார்கள். அப்போதே ராஜினாமா செய்திருந்தால் தமிழக மக்கள் இப்போது வாக்களித்திருப்பார்கள். ஆனால் அப்போது நாடகம் போட்ட திமுகவிற்கு இப்போது மக்கள் தண்டனை கொடுத்திருக்கின்றனர்.
தமிழகத்திற்கு துரோகம்
மத்தியில் 10 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. காவிரி பிரச்னை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகட்டும். அவர்கள் தமிழகத்திற்காக என்ன செய்தார்கள்.
அமைச்சர் பதவி
எத்தனையோ அமைச்சர் பதவி கேட்டு போராடிய திமுக, நீர்பாசனத்துறையை கேட்டு போராடமல் விட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜயகாந்த் பெருந்தன்மை
ஈழத்தமிழர்களின் கண்ணீரை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று நண்பர் விஜயகாந்த் கூறிவிட்டார். நண்பர் விஜயகாந்த் பெருந்தன்மையானவர் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.
சாயம் வெளுத்திருக்கும்..
அ.தி.மு.க தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மற்ற கட்சிகள் தனியாக நின்றிருந்தால் சாயம் வெளுத்திருக்கும் என்றார் டி.ராஜேந்தர்.
நல்லதும் கெட்டதும் உண்டு
அ.தி.மு.க அரசின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, யாருடைய ஆட்சியாக இருந்தாலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்றார் ராஜேந்தர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications