பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தால் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவற்றில் http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி smart phone மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன், பிறந்த தேதியையும் அளிக்கவேண்டும்.
பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் அந்த செல்போனில் இருந்து SSLC என்று செல்போனில் பதிவு செய்து சற்று இடம் விட்டு ரிஜிஸ்டர் நம்பரை பதிந்து 53576 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் முடிவை தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications