முகநூலில் தொடர்பு கொண்ட பள்ளி மாணவி… நேரில் வாழ்த்திய கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் மாணவியை நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. சந்திக்க அனுமதி கேட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொண்டதற்கு உடனடியாக பதிலளித்து மாணவியை சந்தித்துள்ளார் கருணாநிதி.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கைகள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்டு வருகிறார். உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன. அந்த முகநூலில் உலகின் பல்வேறு முனைகளிலிருந்தும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்

SSLC topper girl meet Karunanidhi

இந்நிலையில், நேற்று (28-5-2015) மாலை, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த - கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரத்தைச் சேர்ந்த கிரின் வேலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செல்வி.ஹரிணி, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்பதிவினை பார்த்த கருணாநிதி உடனடியாக அனுமதி தந்தார்.

மாணவி செல்வி ஹரிணி உடனடியாக ஓசூரிலிருந்து சென்னைக்கு வந்து இன்று (28-5-2015) மாலை, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவி ஹரிணியின் பெற்றோர் மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் இணையதள இயக்குநர்கள் என்.நவீன், எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+