For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக “கோயபல்ஸ்” ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததாக பேசியுள்ள ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என்று சாடியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசிய அவர், "உள்ளாட்சி அமைப்புகளில் நான்தான் 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தேன்", என்று ஒரு மிகப்பெரிய பொய்யை பேசியிருக்கிறார். அப்பட்டமான பொய்களை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்காக ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்குதான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர் 2016 ஆம் ஆண்டின் புதிய "கோயாபல்ஸ்" என்றே கூட சொல்ல முடியும். அந்த அளவிற்கு தேர்தல் பிரச்சாரங்களில் தேடித் தேடி பொய் பேசி வருகிறார்.

Stalin about jayalalitha in campaign

இன்று தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று கூட சொல்ல முடியாது, அது மருத்துவமனையில் ஐ.சி.யு வார்டில் படுத்துக் கொண்டிருந்தாலும் கூட பரவாயில்லை, கோமா நிலையில் உள்ளது. ஆகவே இந்த அரசு மீள வேண்டுமானால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு சென்றாக வேண்டும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை எடுத்து வைக்கவே நான் இங்கு உங்களை நாடி வந்திருக்கிறேன்.

ஒரு ஆட்சி முடிந்து, வேறு ஆட்சி வந்தால் அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களை முன்னாள் அமைச்சர் என்போம். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறை 30 க்கும் மேற்பட்டவர்கள் "முன்னாள்" ஆக்கப்பட்டார்கள். 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த ஆட்சியின் நிர்வாகம் எந்தளவிற்கு சீர்கெட்டுப் போயிருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். விழுப்புரம் தொகுதியில் இருந்தவர் கூட முன்னாள் ஆக்கப்பட்டவர். அதற்கு என்ன காரணம் என்று செய்திகள் வந்தன. நான் ஜெயலலிதா போல எதையும் உளர மாட்டேன். ஆதாரத்தோடு, புள்ளி விவரத்தோடுதான் பேசுவேன். காரணம் நான் கலைஞரின் மகன் அல்லவா ?

உள்ளாட்சி அமைப்புகளில் நான்தான் 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தேன்", என்று ஒரு மிகப்பெரிய பொய்யை பேசியிருக்கிறார். அப்பட்டமான பொய்களை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்காக ஒரு "நோபல் பரிசு" கொடுக்க வேண்டும் என்றால் அது தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்குதான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர் 2016 ஆம் ஆண்டின் புதிய "கோயாபல்ஸ்" என்றே கூட சொல்ல முடியும். அந்த அளவிற்கு தேர்தல் பிரச்சாரங்களில் தேடித் தேடி பொய் பேசி வருகிறார். எனவே, திமுகவிற்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்" என்று பேசினார் ஸ்டாலின்.

English summary
Jayalalitha deserves nobel prize, M.K.Stalin says in Campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X