சட்டசபையில் பேச முடியவில்லை.. திருமண விழாக்களில்தான் பேச முடிகிறது: ஸ்டாலின் குமுறல்
சட்டசபையில் பேச முடியவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை என என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருமண விழாக்களில்தான் அதிக நேரம் பேச முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபையில் பேச முடியவில்லை என்றார்.

ஆட்சியாளர்கள் குறித்து பேசதான் சபாநாயகர் அனுமதி தருகிறார் என்ற ஸ்டாலின் குற்றங்கள் குறித்து பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்றார். மேலும் திருமண விழாக்களில் தான் அதிக நேரம் பேச முடிவதாக ஸ்டாலின் கூறினார்.
சபாநாயகர் பேசக்கூடாது என அனுமதி மறுக்கும் போதுதான் திமுகவினர் வெளிநடப்பு செய்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications