தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிப்பு!
முதல்வர் பதவி விலக கோரி தலைமை செயலகம் அருகே ஸ்டாலின் உள்ளிட்டோர் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: முதல்வர் பதவி விலக கோரியும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரியும் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.
இதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

முதல்வர் விலகக் கோரி
அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிகிகை விடுக்கப்பட்டது.
மேலும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

குண்டுக்கட்டாக தூக்கி
இதையடுத்து அவை காவலர்கள் ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதையடுத்து தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஸ்டாலினும் மறியல் போராட்டம் நடத்தினார்.

ஆயிரக்கணக்கில் திமுகவினர்
பின்னர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீஸார் மற்ற திமுக தலைவர்களையும் கைது செய்தனர். ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் முன்பு திரளுவதால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது.

வேனை மறித்துப் போராட்டம்
ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை நகர விடாமல் தடுக்கும் வகையில் திமுகவினர் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் பெரும் திணறளுக்குள்ளானார்கள்.

ஸ்டாலின் விடுவிப்பு
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்த நிலையில் ராயபுரத்தில் தி.மு.க.வினர் சாலையில் படுத்தபடி மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications