எவ்வளவு பணம் கொடுக்கிறாங்க அதிமுகவிலிருந்து.. வாக்காளர்களிடம் விசாரித்த ஸ்டாலின்
ஏற்காடு: ஏற்காடு இடைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம்க்களிடம் உங்களுக்கு அதிமுகவினர் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு மக்கள் ரூ. 2000 தருவதாக கூறவே, ரூ. 3000 ஆக கேட்டு வாங்குங்கள் என்று கூறினார்.
கிட்டத்தட்ட 23 மலை கிராமங்களில் நேற்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் அவர் பேசினார்.
கூட்டங்களில் அவர் பேசுகையில், ஏற்காடு தொகுதி என்றாலே அது ஏற்காடு மலை தான் அடையாளம். ஆனால் அந்த அம்மையார் இந்த மலைக்கு உங்களை பார்க்க வந்தாரா? வரவில்லை. ஏனெனில் அவர் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க விரும்பும் சொகுசுவாசி.

இந்த மலையில் குண்டும் குழியுமான சாலையில் வருவாரா? இங்குள்ள சில சாலைகள் கூட கடந்த தி.மு.க ஆட்சியில் போடப்பட்டது தான். அந்த அம்மையாருக்கு ராசியான எண் 9. அதனால் தான் ஒன்பது இடத்தில் பிரசாரம் செய்து விட்டு பறந்துவிட்டார்.
தற்போது வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்து வருகிறார்கள் என கேள்விப்பட்டேன். 4ம் தேதி தேர்தல் முடிந்ததும் இங்கு ஏற்காடு தொகுதியிலும் மின்வெட்டு அமுலுக்கு வந்துவிடும். அப்போது இந்த விளக்கு உதவும் என்று தான் அ.தி.மு.க கொடுத்து வருகிறது போல.

சரி, உங்களுக்கு வாக்குக்கு எவ்வளவு பணம் தருகிறார்கள் அ.தி.மு.க வினர்? (2000 ரூபாய் தருகிறார்கள் என்று மக்களிடமிருந்து பதில்). இனிமேல் மூவாயிரம் கேளுங்கள். அது உங்கள் வீட்டு பணம் தான். கொள்ளை கொள்ளையாய் அவர்கள் கொள்ளையடித்ததை தானே தருகிறார்கள். எனவே பணத்தை வாங்கிகொள்ளுங்கள். ஆனால் உங்களது ஓட்டை படித்த உங்கள் மாறனுக்கு குத்துங்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications