சட்டசபையில் புதிய திருப்பம்: ஓபிஎஸ் அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு-கடும் அமளி!
சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் திடீரென ஆதரவு தெரிவித்து பேசியதை தொடர்ந்து கடும் அமளி நிலவியது.
சென்னை: சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுக அணிக்கு திமுக திடீர் ஆதரவை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சபை கூடியதும் ஓபிஎஸ் அதிமுகவின் கொறடா செம்மலை பேசுவதற்கு சபாநாயகர் மைக் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு சசிகலா அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு எம்.எல்.ஏக்களும் முழக்கங்களை எழுப்பி வாதத்தில் ஈடுபட்டதால் கடும் அமளி நிலவியது.
அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர். இந்த பெரும் அமளிக்கு மத்தியில் தமது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்துள்ளார்.












Click it and Unblock the Notifications