வாங்க, மொத்த எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம்.. ஸ்டாலின் அதிரடி
Recommended Video

சென்னை: காவிரிப் பிரச்சினைக்காக அனைத்து எம்.பிக்களும் மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று அதிமுகவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் இதுவரை தமிழகம் வரலாறு காணாத நிதானத்தையும், பொறுமையையும் மட்டுமே கடைப்பிடித்து வந்துள்ளது. எந்த காலகட்டத்திலும், எந்தச் சூழலிலும் அது சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதே இல்லை. ஆனால் மறுபக்கம் கர்நாடகம் முற்றிலும் நேர் மாறாகத்தான் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் இந்த பக்குவம், பொறுமை, நம்பிக்கை எப்போதுமே பலவீனமாக மட்டுமே எதிர்த் தரப்பால் பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் கூட தமிழகத்தை ஒரு தூசு போலவே கருதுகிறது, கர்நாடகத்திற்குக் காட்டும் பரிவு, பாசத்தில் ஒரு சதவீதம் கூட தமிழ்நாட்டின் பக்கம் அது திருப்புவதில்லை.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இதனால் மக்கள் வேதனையில் வெம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி, மாற்றாந்தாய் மனப்பான்மையில் மட்டும் இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் இந்த முறை ஏதாவது அதிரடியை தமிழகம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏங்கிக் காத்திருக்கின்றனர்.

37 எம்.பிக்கள்
இப்போது தமிழகத்தில் அதிக எம்.பிக்களை வைத்திருப்பது அதிமுகதான். லட்டு போல 37 பேர் உள்ளனர். லோக்சபாவில் 3வது பெரிய கட்சி அதிமுகதான். இதை வைத்து மத்திய அரசுக்கு அதிமுக ஆட்டம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். அதிமுக அரசு அப்படி எந்த அதிரடியும் காட்ட வாய்ப்பில்லை என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் அந்த அதிரடியைக் காட்ட வேண்டும் என்று அதிமுக அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வாங்க விலகலாம் - ஸ்டாலின்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் எடப்பாடியாரைச் சந்தித்தபோது உங்களிடம் 50 எம்.பிக்கள் உள்ளனர். எங்களிடம் நான்கு பேர் உள்ளனர். தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுத்தால் மொத்தமாக ராஜினாமா செய்வோம் என மத்திய அரசுக்கு நீங்கள் அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார் ஸ்டாலின்.

அதிமுக, திமுக இதைச் செய்ய வேண்டும்
உண்மையில் இதை மட்டும் அதிமுகவும், திமுகவும் செய்தால் ஒட்டுமொத்த தமிழகமும் இந்த இரு கட்சிகளுக்கும் முழு ஆதரவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகம் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பில் இருப்போருக்கு இது அதிர்ச்சி தரக் கூடியதாக இருக்கும். தமிழகத்தையும் மதிக்க அவர்கள் முன்வரக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படலாம்.
எனவே தமிழக மக்களுக்காக இதை இரு கட்சிகளும் உறுதியோடு செய்யுமா?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications