தஞ்சையில் இன்று அஞ்சுகம் பூபதிக்காக வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்
சென்னை: தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தவிர மற்ற 232 தொகுதிகளுக்குமான சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் வரும் 23ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, அந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று தஞ்சையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர். அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார்.
ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார விபரம் பின்வருமாறு:-
மாலை 4 மணிக்கு - வல்லம் பேரூராட்சி, அண்ணாசிலை அருகில்,
மாலை 5 மணி- நீலகிரி ஊராட்சி.
மாலை 6 மணி-நாஞ்சில் கோட்டை ஊராட்சி., இரவு 7 மணி- மாரியம்மன் கோவில்
இந்தத் தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications