அந்தோ.. நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே! ஸ்டாலின் இரங்கல்
நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்த பிரதீபா, தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் அரசு கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக கடந்த ஓராண்டாக காத்திருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார்.
இதில் வெறும் 39 மதிப்பெண்களே பெற்ற நிலையில் மனமுடைந்த பிரதீபா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி இதயத்தை நொறுக்குகிறது! மீளாத் துயரில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
அந்தோ..#NEET எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே! 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி இதயத்தை நொறுக்குகிறது! மீளாத் துயரில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! pic.twitter.com/HE4AUNsPOM
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
ஏற்கனவே அரியலூர் அனிதாவை இழந்தோம். இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம். நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய,மாநில அரசுகளின் வஞ்சகத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்த உயிர்ப்பலிக்கு இரண்டு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரியலூர் அனிதாவை இழந்தோம்.இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம்.நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய,மாநில அரசுகளின் வஞ்சகத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்த உயிர்ப்பலிக்கு இரண்டு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! #NeetKillsPradeeba
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications