அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்திய ஒத்திகை- டெல்டா மா.செக்களுடன் தீவிர ஆலோசனை
காவிரி பிரச்சனை குறித்து டெல்டா மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக டெல்டா மாவட்ட செயலாளர்களிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி விவகாரத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய பெயர், மற்றவர்களுக்குச் சென்று சேருகிறது. இதை மாற்றும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் அமைய வேண்டும்' எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக, வாரியம் என்பதற்குப் பதிலாக ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆணையத்தை அமைத்தால், அது தன்னாட்சி கொண்டதாக இருக்காது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியதாகவே அமையும்.

கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதற்கு ஒப்புதல்தான் அளித்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மத்திய அரசு நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்று விளங்கவில்லை' என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். டெல்டா மாவட்டத்தில் உள்ள பத்து மாவட்ட செயலாளர்களிடமும் விவாதித்தார் ஸ்டாலின்.
விரி தண்ணீர் வராததால் ஏற்பட்ட பாதிப்புகள்? ஜுன் மாதத்துக்குள் வராவிட்டால் என்ன நடக்கும்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கருத்து கேட்டு, குறிப்பெழுதிக் கொண்டார். வாரியம் என்பதற்கும் ஆணையம் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் மற்றும் காவிரி தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் விரிவாகக் கேட்டறிந்தார். காவிரி விவகாரத்தில் நம்முடைய பங்கு என்ன? அ.தி.மு.கவின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் ஜுன் மாதத்துக்குள் காவிரி நீரைக் கொண்டு வருவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது. 'காவிரி உரிமையை தி.மு.கதான் போராடிப் பெற்றுக் கொடுத்தது' என்பதை கூட்டம் போட்டுப் பேசினால், நமக்கான பலன் வந்து சேரும். அப்படிச் செய்யாவிட்டால், அதன் பலன் அ.தி.மு.கவுக்குத்தான் போகும்' எனவும் பேசியுள்ளனர். இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கான ஒத்திகையாகவே டெல்டா மா.செக்களிடம் விவாதித்தாராம் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications