இலவச பயிற்சி மையத்தில் படித்து அதிக மதிப்பெண்: மாணவ-மாணவிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த ரொக்கப்பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் டி.என்.பி.எஸ்.சி.யில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 32 மாணவ மாணவிகளுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2.25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளித்து வாழ்த்து கூறினார்.

Stalin gives cash rewards for SSLC and TNPSC students

சென்னை வடபழனியில் அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் சார்பில் மு.க.ஸ்டாலின் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு மாலை நேரங்களில் இலவசமாக டியூசன் நடத்தப்படுகிறது. இது தவிர டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையமும் செயல்படுகிறது.

Stalin gives cash rewards for SSLC and TNPSC students

இங்கு டியூசன் படித்த 10 வது வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 8 பேர் 400 மதிப்பெண்களும் 9 பேர் 350 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 2 பேர் 300 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றனர். 4 பேர் 250 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

Stalin gives cash rewards for SSLC and TNPSC students

இந்த 32 மாணவ-மாணவிகளையும் அண்ணா அறிவாலயத்துக்கு மு.க.ஸ்டாலின் இன்று வரவழைத்து பாராட்டினார். அவர்களில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 பேருக்கு தலா 7,000 ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசாக மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் வழங்கினார். இதேபோல், இந்த பயிற்சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த சரண்யாவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கிய ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து கூறினார்.

Stalin gives cash rewards for SSLC and TNPSC students
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+