வருகிறது புதிய கூட்டணி... மு.க.ஸ்டாலின் சூசகத் தகவல்!
சென்னை: தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் புதிய கூட்டணி அமையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், கண்டிப்பாக புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது அது குறித்து வெளிப்படையாக தெரிய வரும்.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக புதிய கூட்டணி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. நிச்சயம் புதிய கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்துத் தெரிய வரும் என்றார்.
அழைப்பிதழ் கொடுக்க வந்தார் - வைகோ
வைகோ கூறுகையில், தனது தம்பியின் மகன் திருமணத்திற்கு வருமாறு கோரி அழைப்பிதழ் கொடுக்க மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இது மகிழ்ச்சியான நாள். கடந்த பல வருடமாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நானும், இதர மதிமுக மூத்த தலைவர்களம் திருமணத்தில் கலந்து கொள்வோம் என்றார் வைகோ.
மதிமுகவை உருவாக்கிய பின்னர் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் ஸ்டாலினும், வைகோவும் சந்தித்ததில்லை. இதுதான் முதல் முறையாகும். 1991ம் ஆண்டு மதிமுகவை திமுகவிலிருந்து பிரிந்து வந்து உருவாக்கினார் வைகோ.












Click it and Unblock the Notifications