“தேர்தல் அமைதி பற்றி மக்கள்தான் சொல்ல வேண்டும், தேர்தல் ஆணையம் அல்ல” – ஸ்டாலின் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தேர்தல் நடத்தும் அதிகாரி என்றுமே தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்தது என கூறக் கூடாது. தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை மக்கள் தான் கூற வேண்டும்'' என தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை "கேத்தே பசிபிக்" விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.

Stalin interview about the lokshabha election…

முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், "2ஜி ஸ்பெக்ட்ரம்" ஊழல் தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மற்றும் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் சேர்க்கப்பட்டிருப்பது போன்றவை எல்லாம் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பானவை என்பதால் அது தொடர்பாக நான் எதுவும் கூற முடியாது.

லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். பிரசாரத்திற்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு இருந்தது. தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும்.தேர்தலின் போது என்ன நடந்தது என்று மக்களுக்கு நன்கு தெரியும்.

தேர்தல் நடத்திய அதிகாரியே தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்தது என்று சொல்லக்கூடாது. அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்வது வழக்கமான ஒன்றே. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+